தமிழ்நாடு

திமுக தான் அதிமுகவில் இணையும்: செல்லூர் ராஜூ ஆரூடம்!

Published

on

நாளடைவில் அதிமுக தனது தாய் கழகமான திமுகவில் இணைந்து விடும் என நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘திமுக தான் அதிமுகவில் இணையும் என்றும் அதிமுக திமுகவில் இணைந்து விடும் என ஐ பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும் மூன்றாவது பெரிய கட்சி என கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ‘ பாஜக தலைவர் அண்ணாமலை அப்படி சொல்வதற்கு காரணம் அது வளரும் கட்சி என்பதால் தான் என்றும், ஒரு வளர்ச்சி அப்படித்தான் சொல்வார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக அதிமுக தவிர மூன்றாவது கட்சி ஆட்சிக்கு வர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதா இல்லாமல் அதிமுக முதல் முறையாக தேர்தலில் தனித்து களம் கண்டது என்றும் அதிமுகவில் தலைமையே கிடையாது என்றும் இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம் என்றும் அதிமுக வின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை என்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை என்றும் திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் கண்டிப்பாக விரைவில் ஆட்சி மாறும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுகவின் வெற்றிக்கு காரணம் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version