Connect with us

தமிழ்நாடு

திமுகவை வெறுப்பேற்ற செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை!

Published

on

தமிழக சட்டசபையில் மானியக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை ஒன்று திமுகவினரை கோபமடைய வைத்துள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய கதை, ஒரு பெண்ணிற்கு நீண்ட நாட்களாக ஜோதிடர்காள் மூலம் வரன் பார்த்தார்கள். கடைசியில் அந்த பெண்ணின் அப்பாவிடம் வந்த புரோகிதர் ஒருவர், உங்கள் மகளுக்காக கஷ்டப்பட்டு ஒரு ஜாதகம் எடுத்து வந்துள்ளேன். அதில் மணமகனுக்கும் மணமகளுக்கும் 8 பொருத்தங்கள் சரியாக உள்ளது. 2 மட்டுமே சரியில்லை என்றார். அதற்கு பெண்ணின் தந்தை நான் ஏற்கனவே நொந்து போயிருகிறேன். இந்த வரனையே முடித்துவிடுவோம் என்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

திருமணத்தின் போது மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனிடம் புரோகிதர் பொறியைக் கொடுத்து போடச் சொன்னார். அவனோ அந்த பொறியை தன் வாயில் போட்டுக்கொண்டான். இதனால் கோபமடைந்த புரோகிதர், மணமகனிடன் பொறியை யாக குண்டத்தில் போட வேண்டும் என்றார். உடனே மணமகன் தன் வாயிலிருந்த பொறியை யாக குண்டத்தில் துப்பினான். இதனால் மீண்டும் கோபமடைந்த புரோகிதர் முகூர்த்த நேரம் வந்தவுடன் தாலியை எடுத்துக் கட்டச் சொன்னார். உடனே மணமகன், நான் எது பண்ணாலும் உனக்கு தப்பாவே படுது. தாலி கட்டுனாலும் ஏன் இப்படி கட்டுன, ஏன் அப்படி கட்டுனனு ஏதாவது சொல்லுவ. அதனால் இந்த வேலையே வேணாம். நீயே கட்டு என்று கூறினார்.

இதனால் பதறிப்போன பெண்ணின் தந்தையிடம் புரோகிதர், நான் அப்பவே அவனுக்கு இரண்டு பொருத்தங்கள் இல்லை என்று கூறினேன். ஒன்று சொல்புத்தி, மற்றொன்று சுயபுத்தி என்றார். இதனையடுத்து திருமணத்தையே நிறுத்திவிட்டார் மணமகளின் தந்தை. அதுபோலவே மணமேடை இருக்கும், மணமகள் இருப்பார். ஆனால் சிலருக்கு மட்டும் கல்யாணமே நடக்காது.

அதாவது சிலர் அடுத்து நாங்கள்தான் நாங்கள்தான் என்பார்கள். ஆனால் அது நடக்கவே நடக்காது என திமுகவை மறைமுகமாக தனது குட்டிக்கதை மூலம் விமர்சித்தார் செல்லூர் ராஜு. இதற்கு திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ஜாதகம் உங்களுக்குத்தான் பார்த்தோம். 10 பொருத்தமும் சரியாக இருந்தால், அந்தத் திருமணம் ஈடேறாது. அப்படியிருந்தால் குடும்பத்திலிருக்கும் ஒருவர் இறந்துவிடுவாராம் என்றார்.

இதனையடுத்து துரைமுருகனுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் நாங்கள் நன்றாக ஆட்சியில் இருக்கிறோம். திமுகவுக்கு ஜாதகம் சரியில்லாத காரணத்தால்தான் மேலும் இல்லாமல் கீழும் இல்லாமல் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!