தமிழ்நாடு

கலைஞர் வல்லமை மிக்கவர்: புகழும் அமைச்சர் செல்லூர் ராஜூ!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவினர் யாரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ புகழ்ந்து பேச மாட்டார்கள். ஆனால் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைன்ஞர் வல்லமை மிக்கவர் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளை விரட்டியடிக்கும் வரை தூங்கமாட்டேன், விரைவில் திமுக ஆட்சியமைக்கும் என்று ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ஸ்டாலின் நலமுடன் இருக்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். எதிரிகள் வலுவாக இருந்தால்தான் எங்களுக்கு வேலை அதிகரிக்கும். கலைஞர் வல்லமை பொருந்தியவர் என்பதால்தான் திமுகவை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எதிரியாக எதிர்க்கட்சியாகக் கருதினார்கள். அவரை எதிர்த்தால்தான் அதிமுகவினர் சுறுசுறுப்பாக பணியாற்றினர். அதுபோலதான் நாங்கள் ஸ்டாலினை நினைக்கிறோம் என்றார்.

மேலும் விரைவில் ஸ்டாலின் தூக்கமில்லாமல் மன உளைச்சலில் சிக்கப்போகிறார், ஸ்டாலின் உதயநிதிய தனது வாரிசாக உருவாக்கி விட்டு திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது என விமர்சித்தார்.

seithichurul

Trending

Exit mobile version