இந்தியா

வீரரின் இறுதிச்சடங்கில் செல்ஃபி எடுத்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்!

Published

on

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சருமான கே.ஜே.அல்போன்ஸ் செல்ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14-ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியா இதற்கு பதில் தாக்குதல் கொடுக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் சொந்த கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதிச்சடங்கில் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் உயிரிழந்த வீரர் வசந்தகுமாரின் உடல் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது அமைச்சருக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version