தமிழ்நாடு
புத்தாண்டு அன்று எல்லா கோவில்களும் திறந்திருக்காது: அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பம்!
![sekhar babu 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/sekhar-babu-1200.jpg)
புத்தாண்டன்று கோவில்களில் சென்று பக்தர்கள் வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என அமைச்சர் சேகர் சேகர் பாபு அவர்கள் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது புத்தாண்டு அன்று அனைத்து கோவில்களும் திறந்து இருக்காது என்றும் ஒரு சில கோவில்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று கூறியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமானோர் நள்ளிரவு 12 மணிக்கு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து கோயில்களும் திறந்திருக்காது என்றும் ஒரு சில கோவில்களில் மட்டுமே திறந்திருக்கும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும் கோயில்களில் மட்டும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் எந்தெந்த கோயில்கள் நள்ளிரவு திறந்திருக்கும் எந்தெந்த கோயில்கள் திறக்கப்படாது என்பதை அவர் விளக்கமாக கூறவில்லை என்பதால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அதிகாலை 4:00 மணிக்கு வழக்கம் போல் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என்றும் அதன் பின்னர் பொதுமக்கள் கோவில்களில் சென்று புத்தாண்டு வழிபாடுகளை செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.