தமிழ்நாடு

‘ஆட்சிக்கு வரேன்… தமிழகத்தில 5 தலைநகரங்கள உருவாக்குறேன்…’- சீமான் அதிரடி

Published

on

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறை நடக்கும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, திருவொற்றியூரில் களம் காண்கிறார்.

இந்நிலையில் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக ஆட்சியில் மக்கள் வாழ்ந்து பார்த்து விட்டீர்கள். அப்படி ஒன்றும் அது நல்ல ஆட்சி இல்லை என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். அதேபோல அதிமுக ஆட்சியிலும் வாழ்ந்துவிட்டீர்கள். அதிலும் ஒன்றும் உங்களுக்குச் சிறப்பான விஷயம் நடந்து விடவில்லை.

தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் வாழ்ந்துவிட்டீர்கள். நாங்கள் கேட்பது எல்லாம் ஒரு முறை எங்கள் ஆட்சியில் வாழுங்கள். அப்போது தான் எங்களின் அருமை உங்களுக்குத் தெரியும். உங்கள் பிள்ளைகளான எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்.

தமிழகத்தில் இன்னும் இலவசமாக அரிசி கொடுக்கும் திட்டம் அமலில் உள்ளது. இலவசமாக அரிசி வாங்கிச் சாப்பிட்டுத் தான் உயிர் வாழ முடியும் என்றிருப்பது எவ்வளவு பெரிய இழி நிலை. இதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் எங்களால் மாற்ற முடியும்’ என்று பேசினார்.

Trending

Exit mobile version