சினிமா

சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை மாதிரி இல்லை.. சந்தேகம் வரவைக்கிறது.. சீமான் கருத்து

Published

on

சென்னை: கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வர வைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து மீதான சின்மயி புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியில் வைரமுத்துவிற்கு அவர் ஆதரவாக பேசி இருந்தார்.

இதையடுத்து இன்று அவர் அளித்த பேட்டியில்,  சின்மயி இந்த குற்றச்சாட்டுகளை இத்தனை வருடமாக ஏன் மறைத்தார். பிரபலமான நபர்களை தாக்கி பேச வேண்டும் என்பது இப்போது வழக்கமாகி உள்ளது.

வைரமுத்து ஒருவேளை தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். சட்டப்படி புகார் கொடுக்கலாம். இவ்வளவு வழி இருக்கையில் அதை டிவிட்டரில் சென்று எழுதுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. இது பெரிய சந்தேகம் வர வைக்கிறது.

வைரமுத்துவிற்கு களங்கம் ஏற்படுத்தவே இப்படி செய்கிறார்கள். ஏன் அரசியல்வாதிகள் மீது கூடதான் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. சின்மயி புகார் சந்தேகம் வரவைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version