தமிழ்நாடு

அன்புத்தம்பி விஜய் துணிந்து நில், அஞ்சுவது நம் பரம்பரைக்கே கிடையாது: சீமான்

Published

on

அன்பு தம்பி விஜய் துணிந்து நில், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரை கிடையாது, இது அவதூறு தானே ஒழிய குற்றமில்லை, தொடர்ந்து செல், ஏறு ஏறு ஏறு, நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உறுதியோடு முன்னேறி வா’ என சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ரோல்ஸ் ராய் கார் விபத்தில் சிக்கிய விஜய்க்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது என்பதும், நீதிமன்றத்தின் இந்த கண்டனம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. விஜய்க்கு ஆதரவாக பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஜய்க்கு எதிராக சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக்குகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களே விஜய் குறித்து விமர்சனம் செய்ததற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த பிரச்சினை குறித்து கூறியபோது ’அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரை கிடையாது என்றும் அன்புத்தம்பி விஜய் துணிந்து நில் என்றும், இது அவதூறு தானே ஒழிய குற்றம் இல்லை என்றும் தொடர்ந்து செல்’ என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

 

Trending

Exit mobile version