தமிழ்நாடு

காங்கிரஸ் தலையில்லா முண்டம்: சீமான் காட்டம்!

Published

on

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராகுல் காந்தி. இதனையடுத்து ராகுல் காந்தி பலமுறை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாலும், புதிய தலைவர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படாமலும் இருப்பதால் காங்கிரஸ் கட்சி தற்போது தலைமை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான் தலையில்லா முண்டம் என விமர்சித்துள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீப லஷ்மிக்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை தலையில்லா முண்டமாக ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கக் கூடிய தகுதி இல்லாத கட்சியாக இருக்கின்றது என காட்டமாக விமர்சித்தார். இது தமிழக காங்கிரஸ் கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version