தமிழ்நாடு

மாரிதாஸ் விவகாரம்: மேடையில் செருப்பை தூக்கி காண்பித்த சீமான்!

Published

on

மாரிதாஸ் விவகாரம் குறித்து மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென செருப்பை எடுத்து காண்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், ‘மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என்றும் அதனால் மாரிதாஸ் நான்கே நாளில் வழக்கில் இருந்து விடுபட்டு உள்ளார் என்றும் இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் உண்மையான சங்கி திமுக தான் என இதிலிருந்து தெரிகின்றது என்றும் சீமான் கூறினார்.

அப்போது அவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு காலில் இந்த செருப்பை தூக்கி காண்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாரிதாஸ் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன் என்றும் சாட்டை துரைமுருகன் கைதை எதிர்த்து குரல்கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள் மாரிதாஸ் விஷயத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி என்றால் உண்மையான சங்கிகள் யார் என கூறிய சீமான் உண்மையான சங்கி திமுக தான் என்றும் கூறி தனது காலில் இருந்த செருப்பை திமுகவுக்கு என்பது போல் காண்பித்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் என்னை வெறியனாக மாற்ற வேண்டாம் என்றும் நான் ஜனநாயகவாதி ஆகவே இருக்க விரும்புகிறேன் என்றும் கூறினார். அவரது ஆவேசமான பேச்சை ஒருசிலர் ரசித்தாலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட மேடையில் செருப்பை தூக்கி காண்பித்து கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version