சினிமா செய்திகள்

சூர்யா அதை தவிர்த்திருக்கலாம்: ‘ஜெய்பீம்’ படம் குறித்து சீமான் கருத்து!

Published

on

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் ஒருசிலர் இந்த படத்தின் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் சூர்யாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து வந்தனர் என்பதும் அது குறித்து காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த திரையுலகமும் கருத்துகளை தெரிவித்தது என்பதும் இயக்குனர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் உள்பட பல சங்கங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி பாரதிராஜா, ஆர்கே செல்வமணி, வெற்றிமாறன், ராஜீவ்மேனன், உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியான தினத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தார் என்பதும் சூர்யாவை பாராட்டிய இரண்டு பக்கங்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் பாமக தரப்பினர்கள்ம் விடுத்த மிரட்டலுக்கு பின்னர் சீமான் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இந்த நிலையில் தற்போது சீமான், ‘குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை வெளிப்படுத்துவதற்காக எடுத்து இன்னொரு சமூக மக்களுக்கு வலியை ஏற்படுத்தக் கூடாது. சூர்யா அதை தவிர்த்திருக்கலாம் எனத் ஜெய்பீம் விவகாரம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version