தமிழ்நாடு

108 கெடா…ஊருக்கே விருந்து… களைகட்டிய சீமான் வீட்டு விசேஷம்..!- வைரல் புகைப்படங்கள்

Published

on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு விசேஷம் தான் இன்றைய ட்ரெண்டிங் செய்தியாக தமிழகத்தில் உள்ளது.

சீமான் இன்று தனது குல தெய்வம் கோயிலில் மகனுக்கு காது குத்தி மொட்டை அடித்து வழிபாடு செய்தார். தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள கெடா வெட்டி காதுகுத்தி மொட்டை அடிக்கும் விழாவைத் தான் சீமான் இன்று நடத்தி உள்ளார். சீமானின் குல தெய்வ கோயிலான வீரகாளியம்மன் கோயில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள முடிக்கரை பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு ஒரு ஊரையே விழாவுக்காக சீமான அழைத்துள்ளார். மொத்தம் 108 கெடாக்கள் வெட்டப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வயது மகனுக்கு தாய்மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்தும் போது மகனின் வலியைப் பார்க்க முடியாமல் சீமான் கண்ணை இறுக்க மூடிக்கொள்ள அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சீமானுக்கு கடந்த 2013-ம் ஆண்டு கயல்விழி என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 2019-ம் ஆண்டு இந்தத் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்குத் தான் இன்று முதல் மொட்டையும் காது குத்து விழாவும் நடத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version