Connect with us

தமிழ்நாடு

இஸ்லாமியர் என்பதாலே ஷாருக்கானின் மகனை குறிவைப்பதா? சீமான் கண்டனம்!

Published

on

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக்கான் மகன் குறி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் வழக்கில் அத்துமீறல் நடந்திருப்பதாகவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அரங்கேறி வருவதாகவும் இஸ்லாமியர் என்பதால் அவரை குறிவைத்து அரசு அதிகாரம் காய்களை நகர்த்தி வருவதாகவும் அது மட்டுமின்றி 25 கோடி வரை அவரை விடுவிக்க பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆரியன்கானை ஜாமினில் விடுவிப்பதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கும் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள், போதை பொருள் பயன்படுத்தும் நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷாருக்கான் மகன் என்பதாலேயே ஆரியன்கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் முந்த்ரா துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3000 கிலோ எடையுள்ள 26 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத பாஜக அரசு ஆர்யன்கான் வழக்கில் மட்டும் தீவிர ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் சீமான் எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் பின்புலத்தில் பெரும்புள்ளிகள் பலர் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை பாயாத நிலையில் ஆரியன்கானுக்க்8உ எதிராக மட்டும் தீவிரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதச்சார்பின்மை என்ற மகத்தான கோட்பாட்டினை குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிரித்து மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது என்றும் பாஜக அரசின் இந்த கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமானை பாஜகவின் ‘பி’டீம் என திமுகவினர் உள்பட ஒருசிலர் கூறி வரும் நிலையில் மோடி அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!