தமிழ்நாடு

அரைவேக்காடு… காங்கிரஸ் தலைவரை விளாசிய சீமான்!

Published

on

வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படவதாக வெளியான வதந்தி கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ளன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீமானை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியை சீமான் அரைவேக்காடு என கடுமையான வார்த்தையால் விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக குறவர் இன மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு முட்டி போட்டு போராட்டம், தர்ணா போராட்டம், பட்டினி போராட்டம், ஒப்பாரி போராட்டம் என பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன உரையாற்றினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், பாஜகவும், சீமானும் தான் வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு காரணம் என கே.எஸ்.அழகிரி கூறியது அவர் அரவேக்காடு என்பதை நிரூப்பிக்கிறது. ராகுல் காந்தியை என்னிடம் பேச சொல்லுங்கள். முதலில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனரா? என ஓர் குழு அமைத்து ஆய்வு செய்யுங்கள் என்றார்.

Trending

Exit mobile version