தமிழ்நாடு
சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை: மீறினால் கடும் நடவடிக்கை!
சென்னையில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பள்ளிகளை திறந்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மற்றும் மிகமழை பெய்யும் என்றும். வரும் 7-ஆம் தேதி மிக அதிக கனமழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் நேற்றும், இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருவதால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் கூறியுள்ளார்.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில பள்ளிகள் செயல்படுவதாக தகவல்கள் வருகின்றன. பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு மழை காரணமாக ஏதேனும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.