தமிழ்நாடு

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

கடந்த இரண்டு நாட்களாக தான் பள்ளி கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் தற்போது மீண்டும் இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளார்.

அதேபோல் சற்றுமுன் வெளியான தகவலின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளி கல்லூரிகள் இன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வங்க கடலில் உருவாகி காரணமாக ஒரு சில தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையடுத்து ஒரு சில தென் மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version