தமிழ்நாடு

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

Published

on

வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் தோன்றிய தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கனமழை காரணமாக தீபாவளி தினத்திற்கு முன்பு இருந்தே பள்ளிகள், கல்லூரிகள் ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதும் அந்த விடுமுறை தீபாவளி முடிந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன என்பதும், சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அறிவிப்பின்படி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சேலம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி.

மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அறிவிப்பின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர்.

seithichurul

Trending

Exit mobile version