தமிழ்நாடு
நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த கனமழையின் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனமழை காரணமாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அதாவது நவம்பர் 10ஆம் தேதி விருதுநகர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், ராமநாதபுரம் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.