தமிழ்நாடு
சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!
சென்னை உள்பட மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
குறிப்பாக சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னையில் மிக கனமழை பெய்து வருவதையடுத்து நாளை சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது