தமிழ்நாடு

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?

Published

on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது என்பதும், இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மழை நேரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version