தமிழ்நாடு

இன்று 18 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: முழு விபரங்கள்

Published

on

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்றும் 18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை எந்தெந்த மாவட்டங்களுக்கு என்பதையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எந்தெந்த மாவட்டங்களுக்கு என்பதையும் தற்போது பார்ப்போம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இன்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் புதுவையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version