தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்திய சக மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ!

Published

on

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது சக மாணவர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பெண்ணாத்தூர் அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய வகுப்பைச் சேர்ந்த மாணவர் மீது சக மாணவர்கள் தாக்கியதை, வேண்டுமென்றே வீடியோ எடுத்துள்ளனர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பு.

மற்ற மாணவர்களை அச்சுறுத்தும் நோக்கில் அவர்கள் இப்படி காணொலியை எடுத்து உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் அந்த வீடியோ மூலமே அவர்களின் விவகாரம் காவல் துறை வரை சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை, சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிகிறது. பள்ளி தரப்பிலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாணவர்களையும் சிறிய காலம் சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version