தமிழ்நாடு

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகிறதா?

Published

on

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளன .

இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் இந்த பணிகள் முடிவடைந்தவுடன் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version