தமிழ்நாடு
மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும், அதில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 நெருங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தஞ்சை உள்பட ஒருசில மாவட்டங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை பரிசீலனை செய்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசு தற்போது ஒரு அதிரடியாக முடிவை எடுத்துள்ளது. இதன்படி வரும் 22ஆம் தேதி முதல் அதாவது திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.