தமிழ்நாடு
2ஆம் வகுப்பு மாணவன் பலி எதிரொலி: தாளாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் வேனில் இருந்து இறங்கி மீண்டும் வேனில் மறந்துவிட்ட பொருளை எடுக்கச் சென்றபோது திடீரென வேன் ரிவர்ஸில் வந்ததால் மாணவன் மீது வேன் மோதியது.
இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் பலியானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜெய சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் தனியார் பள்ளி முதல்வர் தனலட்சுமி, பள்ளி வாகன பாதுகாவலர் ஞானசக்தி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் வேன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது