வணிகம்
#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்து, 4.4 சதவீதமாக அறிவித்தது.
அதை தொடர்ந்து வங்கிகளும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதுபோலவே, எஸ்பிஐ வங்கி என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஏப்ரல் 1 முதல் கடன் வட்டி விகிதத்தை 7.80 சதவீதத்திலிருந்து 7.05 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது.
ஆர்பிஐ அளித்த சலுகையை அப்படியே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 30 வருட தவணையில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், ஒரு லட்சம் ரூபாய்க்கு 52 ரூபாய் வட்டி குறையும்.
ஆனால், மறுபக்கம் எஸ்பிஐ வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு 0.2 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை வட்டி விகித லாபம் சரியும். இது மார்ச் 28-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எனவே பிற வங்கிகளும், போட்டி காரணமாக விரைவில் வட்டி விகித குறைப்புகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.