வணிகம்

ஐபிஓ-ல் பங்குகளை வெளியிடும் எஸ்பிஐ கார்ட்ஸ்!

Published

on

எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது.

இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 18 சதவீதம் உள்ளது.

தற்போது முதல் முறையாக எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13.5 கோடி பங்குகளைப் பங்குச்சந்தையில் மார்ச் 2-ம் தேதி வெளியிட உள்ளது. மார்ச் 5-ம் தேதி வரை பங்குகளை ஐபிஓ மூலமாக வாங்கலாம்.

எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76 சதவீத பங்குகளும், கார்லைல் குழுமத்திடம் மீதப் பங்குகளும் உள்ளன.

சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது. அதே காலகட்டத்தில் லாபம் 78 சதவீதம் அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக உள்ளது.

எஸ்பிஐ கார்ட்ஸின் இந்த முடிவால், எஸ்பிஐ பங்குகள் இன்று 2 சதவீதம் உயர்ந்து 326.35 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version