வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கி வேலை!

Published

on

எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2000. புரோபேஷனரி அதிகாரி வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Probationary Officer

மொத்த காலியிடங்கள்: 2000

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.04.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பதாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தகவல் அளிப்புக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.04.2019

seithichurul

Trending

Exit mobile version