சினிமா
மீண்டும் நடிக்க வருகிறாரா ஆர்யா மனைவி? இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான வனமகன் படத்தில் கவர்ச்சிப் புயலாக கோலிவுட்டை தாக்கிய நடிகை சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு குழந்தை பெற்றுக் கொண்டு அந்த குழந்தையை அழகாக வளர்த்து வரும் நடிகை சாயிஷா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியாக படு கிளாமரில் போட்டோ ஒன்றை போட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
முன்னழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு திடீரென நடிகை சாயிஷா போட்டோ ஒன்றை பதிவிட்டு இருப்பதை பார்த்து ஷாக்கான அவரது ரசிகர்கள் மீண்டும் நடிக்க வரீங்களா சாயிஷா என கமெண்ட் போட்டு கேட்டு வருகின்றனர்.
தெலுங்கில் 2017ல் வெளியான அகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சாயிஷா இந்தியில் ஷிவாய் படத்தில் நடித்தார். அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி உடன் ஜுங்கா, சூர்யாவுடன் காப்பான், ஆர்யாவுடன் கஜினிகாந்த் மற்றும் டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஜோதிகா உள்ளிட்ட நடிகைகளே திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வரும் போது, சாயிஷாவும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.