கிரிக்கெட்
சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி!
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து மீண்டும் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் சில மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒருசில விஐபிகளும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கங்குலிக்கு கொரோனா தொற்று என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.