இந்தியா

பாஜகவில் இணைகிறாரா கங்குலி? மேற்குவங்க தேர்தலில் போட்டியிட திட்டம்!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளில் இணையும் பிரபலங்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி மிக விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில மாதங்களாகவே சௌரவ் கங்குலி பாஜகவில் இணைய இருப்பதாக இருப்பதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உடல் நலம் தேறி குணமாகி சௌரவ் கங்குலி குணமாகியுள்ளார். இந்த நிலையில் வரும் 7ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், அந்த கூட்டத்தில் சௌரவ் கங்குலி பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வரும் மேற்குவங்க மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் சௌரவ் கங்குலி போட்டியிடப் போவதாகவும் அனேகமாக அவர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version