தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை விடுமுறையா? – வெளியான புதிய தகவல்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச் சந்திக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த காரணத்தினாலும், பாடங்களை சீக்கிரம் முடிக்கும் நோக்கிலும் பள்ளிகள் வாரத்துக்கு 6 நாட்கள் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த 6 நாட்கள் பள்ளித் திறப்புக்கு பதில் 1வது மற்றும் 3வது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனால் கூடிய விரைவில் பள்ளி மாணவர்களுக்கு, முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடுதல் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version