சினிமா
ஐயோ!..அந்த வாய்ப்ப மிஸ் பன்னிட்டேனே!.. இப்போது புலம்பும் சத்தியராஜ்…
![sathyaraj - Bhoomitoday sathyaraj](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/sathyaraj.jpg)
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதால் படக்குழுவினருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரஞ்சித்தின் இயக்கம், ஆர்யா மற்றும் பசுபதியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பசுபதி இப்படத்தில் குத்துச்சண்டை கற்றுத்தரும் ரங்கன் வாத்தியாராக நடித்துள்ளார். நடித்தார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். உண்மையில், இந்த வேடத்தில் நடிக்க படக்குழு முதலில் சத்தியராஜைத்தான் அணுகியுள்ளது. ஆனால், வேறு சில திரைப்படங்களில் நடித்து வந்ததால் இப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார். அதன்பின்னரே, பசுபதி இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது படம் பார்த்த சத்தியராஜ் பசுபதியின் கதாபாத்திரத்தை பார்த்து ‘அடடா இந்த படத்தை மிஸ் செய்து விட்டோமே’ என வருத்தப்பட்டாராம். மேலும், ஆர்யாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தை மிஸ் செய்துவிட்டதாக புலம்பி தீர்த்துவிட்டாராம்…