சினிமா செய்திகள்
பெரிய பழுவேட்டரையராக மிரட்டப் போகும் சத்தியராஜ்!
மணிரத்னம் அடுத்து இயக்க உள்ளதாக கூறப்படும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு நடிகர் சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பாகுபலி படத்தில் கட்டப்பாவாக கலக்கிய சத்யராஜ், பொன்னியின் செல்வன் படத்தின் மிக முக்கிய ரோலான பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமான தேர்வு தான்.
முன்னதாக தெலுங்கு நடிகர் மோகன் பாபு இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வந்த நிலையில், தற்போது சத்யராஜ் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வாகி உள்ளார்.
ராஜ ராஜ சோழன் முடிசூடுவதற்கு முன்னாள் சோழ ராஜ்யத்தில் நடந்த சரித்திர உண்மைகளையும் கற்பனை கதைகளையும் கலந்து அமரர் எழுதிய நாவல் தான் பொன்னியின் செல்வன்.
இந்த படத்தை எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே படமாக்க பலரும் முயன்று வருகின்றனர். ஆனால், இப்போது தான் மணிரத்னம் மூலம் அதற்கான ஆரம்ப வேலை நடைபெற்று வருகிறது.
ராஜராஜ சோழன் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்திற்கு ஜெயம் ரவி தேர்வாகி இருப்பதாகவும், அவரது அண்ணன் ஆன ஆதித்த கரிகாலராக விக்ரம் மற்றும் நண்பன் மற்றும் கனவு கதாபாத்திரமான வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்க தேர்வாகி உள்ளனர்.
பழிவாங்க துடிக்கும் பழுவூர் ராணியாக ஐஸ்வர்யா ராயும் குந்தவை தேவியாக கீர்த்தி சுரேஷும், படகோட்டி பூங்குழலியாக நயன்தாராவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதில், நந்தினி தேவியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராயை 60 வயதில் மணக்கும் சேனாதிபதி பெரிய பழுவேட்டரையராக சத்யராஜ் நடிக்க தேர்வாகி உள்ளாராம்.