இந்தியா
ரயில்களில் உணவு கட்டணம் அதிகரிப்பு… பயணிகள் அதிர்ச்சி!
சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.
இந்தியன் ரயில்வே நிர்வாகம் சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில்களில் உணவு கட்டணத்தை அதிகரித்து அறிவித்துள்ளது.
இந்த உணவு கட்டணங்கள் ரயில் பெட்டிகள் வகுப்பை பொறுத்து மாறும்.
முதல் ஏசி மற்றும் ஈஸி பெட்டிகளில் டீ 35 ரூபாய், காலை சிற்றுண்டி 140 ரூபாய், மதிய சாப்பாடு மற்றும் இரவு உணவு 245 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 2 மற்றும் 3ம் வகுப்பு ஏசி, சேர் கார் வகுப்பு பெட்டிகளின் உணவு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதனால் பிற ரயில்களிலும் விரைவில் உணவு கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளது என பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.