Connect with us

தமிழ்நாடு

அடுத்த 5 நாட்களில் சசிகலாவின் ஸ்கெட்ச் இதுதான்!!!

Published

on

ஜனவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வந்ததில் இருந்து சசிகலாவின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்று தான் தமிழகத்தின் மொத்த அரசியல் தளமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

குறிப்பாக, சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து, ‘தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சொன்னதில் இருந்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. நான்கு ஆண்டு கால சிறைவாசம், கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சசிகலா எப்படியும் அரசியிலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கம்-பேக் கொடுத்துள்ளது பரபரப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அவர் தன்னுடைய நெருங்கிய தோழியாக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வார், அல்லது சென்னை, இராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இல்லை என்றால் ஜெயலலிதாவுடன், தான் தங்கியிருந்த போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்துக்குச் செல்வார் என்றெல்லாம் சலசலக்கப்பட்டது.

சசிகலா, அந்த இடங்களுக்குச் சென்று அரசியல் ஆதாயம் அடைந்து விடக் கூடாது என்னும் நோக்கிலேயே, தமிழக அரசு, அனைத்தையும் ‘பராமரிப்புப் பணிக்காக’ முடியுள்ளது. இந்தத் தடைகளை மீறி சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்துக்குள் நுழைந்து, அஞ்சலி செலுத்துவார் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது.

இன்னொரு புறம், சசிகலா, நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக பகீர் தகவலும் சொல்லப்படுகிறது. இதை அதிமுக தரப்பில் இருந்து மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், முற்றிலும் மறுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் இருக்கிறார்.

இவை அனைத்தையும் விட சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு, அதிமுகவை உடைத்த ‘தர்ம யுத்த நாயகன்’ ஓ.பன்னீர்செல்வத்தின் அமைதி, பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்கிறது.

இப்படி இருக்க கொரோனா தொற்று குணமடைந்த பின்னரும் அடுத்த 5 நாட்களுக்கு உடல்நலனைக் கருத்தில் கொண்டு சசிகலா, தன்னைத் தனிமைப்படுத்தக் கொள்வார் என்றே சொல்லப்படுகிறது. இருப்பினும் அந்த 5 நாட்களில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க காய் நகர்த்தப்படும் என்றும் உள்வட்டாரத் தகவல்.

 

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!