Connect with us

தமிழ்நாடு

ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-ஸுக்கு வேட்டு வைக்க சசிகலா போட்ட புது வழக்கு; ட்விஸ்டு வைத்த ‘சின்னம்மா’

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்து விட்டு, சென்ற மாதம் 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து இம்மாதம் தன் ஆதரவாளர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில், கடந்த 8 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அப்போதில் இருந்து இப்போது வரை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் சசிகலா. இந்நிலையில், அதிமுகவிற்குத் தன்னைத் தான் பொதுச் செயலாளர் என அறிவிக்க வேண்டும் என்று கூறி புதிய வழக்கு ஒன்றை சசிகலா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிடக் கோரி அப்போதே ஒரு வழக்குப் போட்டிருந்தார் சசிகலா.

இந்நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சசிகலா, அவசர விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் வரும் மார்ச் 15 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஒரு பக்கம் நீதிமன்றம் வாயிலாக அதிமுகவைத் தன் வசம் கொண்டு வர சசிகலா காய்களை நகர்த்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைகள் மூலமும் அதிமுகவில் தன் ஆதரவு வட்டத்தை அவர் பெருக்கி வருவதாக தகவல்.

 

 

வணிகம்1 மணி நேரம் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா12 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!