Connect with us

தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார் – டிடிவி தினகரன் அதிரடி

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிடுவேன். சசிகலா தேர்தலில் களம் காணுவார்’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அதிமுகவில் பொதுச் செயலாளருக்குத் தான் மொத்த அதிகாரமும் உள்ளது. எனவே பொதுச் செயலாளரான சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி போட்ட உத்தரவு எதுவும் செல்லாது. அதை மீட்பதற்கான சட்டப் போராட்டம் தொடரும்.

நாங்கள் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். திமுக தான் எங்கள் பொது எதிரி. அவர்களை வீழ்த்தி ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பது தான் எங்கள் நோக்கம்.

சசிகலா மீண்டும் தமிழகத்துக்கு வந்த போது, கிட்டத்தட்ட 24 மணி நேரம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழக வரலாற்றிலேயே யாருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டதில்லை. இதன் மூலம் மக்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியும்.

அமமுக ஆரம்பிக்கப்பட்டது அதிமுகவை மீட்ப்பதற்குத் தான். அது கண்டிப்பாக நடக்கும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். பலர் சசிகலாவின் உடல்நிலை குறித்து என்னிடம் போன் மூலம் அழைப்பு விடுத்து கேட்டறிந்தனர். நண்பர் ரஜினிகாந்த், என்னிடம் அது குறித்து கேட்டு நலம் விசாரித்தார். சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் என்னிடம் பேசியிருக்கலாம். அது குறித்துப் பொதுவெளியில் சொல்லத் தேவையில்லை.

அதிமுக – அமமுக இணைப்பு சாத்தியமே இல்லை என்று சொல்வதை நான் 100 சதவீதம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் போது, அங்கு சசிகலா செல்வார். அதே போல அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் செல்வோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன். ஒரு தொகுதி ஆர்.கே.நகராக இருக்கும். நான் எம்.பி-யாக இருந்த தொகுதியிலும் இந்த முறை போட்டியிடுவேன். சசிகலாவும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். அதற்கான சட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிமுகவில் யாருக்கும் ஆளுமை இல்லை. ஆளுமை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கக் கூடியவர்கள் அவர்கள். ஒரு குறுட்டு அதிர்ஷ்டத்தில் அவர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மேலே இருப்பவனின் ஆதரவு இருந்தது. அவ்வளவுதான். சீக்கிரம் அனைத்தும் முடிவுக்கு வரும்’ என்று கூறினார்.

 

 

 

 

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!