தமிழ்நாடு
சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு… மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு!
பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குரைவு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்க்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வருகிற ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையாகி வெளியே வருவதாக இருந்தது. விடுதலை நாள் நெருங்கி வரும் சூழலில் சசிகலாவுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் பாதிப்பு சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து சசிகலாவை பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கலாம் என சிறை நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் வெளியே வந்ததும் அதிமுகவில் ஒரு பெரும் பூகம்பமே வெடிக்கும் என்று பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.க.ஸ்டாலின், “சசிகலா, 27ந் தேதி வெளிய வருது. அன்னைக்கே அவங்க சென்னைக்கு வருவாங்கன்னு சொல்றாங்க. அவங்க வந்த உடனே இந்த ஆட்சி இருக்குமான்னு தெரியாது. அவங்க வெளிய வந்து 4 நாள் கூட பொறுத்திருக்க வேண்டாம். அன்னைக்கே இந்த ஆட்சி இருக்குமான்றது சந்தேகந்தான். அப்படியான நிலைமையில தான் இந்த ஆட்சி நடந்திட்டு இருக்கு” என்ற கருத்து வைரலாகி வருகிறதுய.