தமிழ்நாடு
ருசிகர சம்பவம் – ‘சின்னம்மா’ வாகனத்தை பின்தொடர்ந்த இளைஞர்; தடுத்த போலீஸ்… செல்ஃபி எடுத்த சசிகலா!
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர், தமிழக எல்லைக்குள் ட்ரோன் மூலம் அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையில் சசிகலா தன் ஆதரவாளர்களுடன் வந்து கொண்டிருந்த போது, ஒரு இளைஞரும் அவர் காருக்கு அருகிலேயே வெகு நேரம் பின் தொடர்ந்து வந்தார். இதைப் பார்த்த போலீஸாரும் வேறு சிலரும் அந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தினார்கள்.
துரத்திய இளைஞர்… அழைத்து செல்ஃபி எடுத்த சின்னம்மா#Chinnamma #Bengaluru #Chennai #TNwelcomesசின்னம்மா #AMMK #TTVDhinakaran #TNWelcomesCHINNAMMA #Sasikala #WelcomeRajamadha pic.twitter.com/W9sXolAykY
— Jaya Plus (@jayapluschannel) February 8, 2021
ஆனால் சசிகலா, அந்த இளைஞரை அருகில் அழைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாக மாறி வருகிறது.
முன்னதாக, பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில் உள்ள ஓசூர் முத்துமாரியம்மன் கோயலில் சசிகலா, அதிமுக துண்டு போட்டுக் கொண்டு போய் வழிபட்டார். அங்கும் அவரது ஆதரவாளர்கள் பெருமளவு குவிந்தனர்.