தமிழ்நாடு

அதிமுகவினர்களை நேரில் சந்திக்க திட்டம்: சசிகலா அறிவிப்பு

Published

on

கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில்கூட தீபாவளி வாழ்த்து கூறும் போது அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் அவர் வாழ்த்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மீண்டும் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அதிமுகவினர்களை அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று நேரடியாக சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’அதிமுகவினர் இருப்பிடத்திற்கே சென்று விரைவில் சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் தம்மை சந்திக்கும்போது பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் ஏழை எளிய ஆதரவற்றோர் வயதாகிவிட்டது தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இறந்தவர்களுக்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்தால் அதுவே தனக்கு அளிக்கும் சிறந்த பரிசு என்று சசிகலா தெரிவித்துள்ளார்

பொதுச் செயலாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவரது ஒற்றுமை மற்றும் அன்பு மட்டுமே எனக்கு வேண்டும் என்றும் உங்களை எல்லாம் நீங்கள் வாழும் இடத்திற்கு நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன் என்றும் விரைவில் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

 

 

Trending

Exit mobile version