தமிழ்நாடு

ஜெயலலிதா வீட்டில் ரஜினிகாந்த்: சசிகலா கூறிய ஆச்சரிய தகவல்!

Published

on

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வீட்டில் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக சசிகலா கூறியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் வீடுகளும் போயஸ் தோட்டத்தில் இருந்தாலும் இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் குரல் கொடுத்தது ஜெயலலிதாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

அதேபோல் ரஜினியையும் பல இடங்களில் ஜெயலலிதா அவமதித்ததாக கூறப்பட்டது. குறிப்பாக சினிமா விழா ஒன்றில் ரஜினியை முதல் வரிசையில் நிற்க வைக்காமல் பின்னால் நிற்க வைத்ததை திரையுலகினர் கூறுவார்கள்.

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா அளித்த பேட்டியில் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் வீட்டில் ஆலோசனை செய்ததாக கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்றார் என்றால் அது ஊடகத்தினர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஊடகத்திற்கே தெரியாமல் ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்றது எப்போது? இருவரும் என்ன ஆலோசனை செய்து இருப்பார்கள்? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த பேட்டி இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் முழுவதுமாக ஒளிபரப்பானால் மேல் விவரங்கள் தெரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version