தமிழ்நாடு
நான் கட்டாயம் வருவேன்: சசிகலாவின் அடுத்த ஆடியோ வைரல்!
கடந்த சில நாட்களாக தொண்டர்களிடம் ஆடியோ மூலம் பேசிவரும் சசிகலா தற்போது நான் கட்டாயம் வருவேன் என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் அவர் மேலும் கூறியதாவது:
தொண்டர்கள் விருப்பப்படி நான் கட்டாயம் வருவேன் என்றும், நல்லபடியாக கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கட்டாயம் வந்து விடுவேன் ஏனெனில் கட்சியை வீணாக்க விட முடியாது எனவும், நான் வந்தால் கட்சிக்குள் சாதி மத பாகுபாடு நான் பார்க்க மாட்டேன் என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் நடப்பேன் என்றும் சசிகலா அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்
மேலும் அதிமுக கொடி கம்பங்களில் கட்சி கொடியே இல்லாமல் இருப்பது வேதனையாக இருப்பதாகவும், நிர்வாகிகளை விட தனக்கு தொண்டர்கள்தான் முக்கியம் என்றும், தொண்டர்களை நான் கைவிடவே மாட்டேன் என்றும், கூறியுள்ளார்.
கட்சியை சரியா கவனிப்பது இல்லை என தொண்டர்கள் தன்னிடம் சொல்லி கொண்டு இருக்கின்றார்கள் என்றும், இதையெல்லாம் சரி செய்வதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை என்றால், நான் வந்துதான் எல்லாவற்றையும் சரி செய்து ஆகணும் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.