செய்திகள்

விடுதலை ஆனார் சசிகலா… நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்தது…

Published

on

தண்டனை காலம் முடிந்து சசிகலா சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலைக்கான உத்தரவை சசிகலாவிடம் வழங்கினார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.

ஜனவரி 21 முதல் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மறுத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார் சசிகலா. அவருக்கு கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய நிலையில் மருத்துவமனையில் இருந்தே சசிகலாவை விடுதலை செய்ய பரப்பன அஹரகார சிறை நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்த சிறை அதிகாரிகள் விடுதலை உத்தரவை சசிகலாவிடம் வழங்கினர்.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சசிகலா விடுதலை ஆனதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version