தமிழ்நாடு

கணவரை அடித்து மண்டையை உடைத்தாரா அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா?

Published

on

அதிமுக பெண் எம்பியான சசிகலா புஷ்பா தனது இரண்டாவது கணவர் ராமசாமியை அடித்து அவரது மண்டையை உடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலா புஷ்பா தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமசாமியும் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர்கள் இருவருக்கும் இடையே தற்போது மோதல் வெடித்துள்ளது. கடந்த வாரம் கணவர் ராமசாமியை சசிகலா புஷ்பா தாக்கியதில் அவரது மண்டை உடைந்து இரவில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் ரோட்டில் தலைதெறிக்க ஓடியதாக கூறப்படுகிறது.

இரவு நேரம் என்பதால் அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலிசாரிடமும் ராமசாமி தன்னை சசிகலா புஷ்பாதான் தாக்கியதாக கூறியுள்ளார். இந்நிலையில் ராமசாமியின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தன்னோட அப்பாவை தாக்கிய சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version