தமிழ்நாடு

மருத்துவமனையில் சசிகலா… விடுதலையில் சிக்கலா?- வழக்கறிஞர் விளக்கம்

Published

on

சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது விடுதலையில் ஏதேணும் சிக்கல் எழுந்துள்ளதா என்ற கேள்விக்கு அவரது வழக்கறிஞர் செந்தூரப் பாண்டியன் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.

சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆகி வெளியே வருகிறார். சொத்துக் குவிப்பில் சிறையில் அடைக்கப்பட்டவர் தற்போது விடுதலை ஆக உள்ளார். இந்த சூழலில் இன்று மதியம் திடீரென சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சசிகலா அனுமதி ஆகியிருப்பதால் அவரது விடுதலையில் ஏதேணும் சிக்கல் உள்ளதா என்ற கேள்வி ஊடகங்களில் எழத் தொடங்கியது. இதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூரப் பாண்டியன், “மாலையில் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார். சசிகலாவின் விடுதலையில் இதனால் எந்தவித சிக்கலும் இல்லை” என உறுதிபட தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version