தமிழ்நாடு
சசிகலா தலைமையேற்க வேண்டும், டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும்: அதிமுகவினர் வலியுறுத்தல்
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏக்கள் திடீரென கோரிக்கை எழுப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வருகிறது. ஆனால் தொடர்ச்சியாக தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுகவுக்கு புத்துணர்ச்சி கொடுக்க தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அதிமுகவை வேண்டும் வழி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் ஏற்கனவே இந்த கருத்தை வலியுறுத்திய நிலையில் தற்போது கவுண்டம்பாளையம் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார் .
அதிமுகவை சசிகலா தலைமையேற்ற வழிகாட்ட வேண்டும் என்றும் தினகரன் வழிநடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து குரல்கள் ஓங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் இணைக்க ஓபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவந்த செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது.