தமிழ்நாடு

ஈபிஎஸ் உள்ளே, சசிகலா வெளியே: மதுசூதனை பார்க்க ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு!

Published

on

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் மதுசூதனனை பார்க்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகியோர் ஒரே நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.

இந்த நிலையில் சசிகலாவும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகிய இருவரும் வந்துள்ளதால் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா அப்பல்லோவுக்கு வந்திருக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து கிளம்பி சென்றார். இதனை அடுத்து சசிகலா அப்போலோ மருத்துவமனைக்கு உள்ளே சென்று மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version