சினிமா செய்திகள்

சசி குமாருடன் கைகோர்த்த சரத்குமார்!

Published

on

சசி குமார் மற்றும் சரத் குமார் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு” நாநா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய நிர்மல் குமார் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு “நாநா” என பெயரிட்டுள்ளனர். இடையே ஒரு புல்லட் ஒன்று பாய்வது போல அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வேற லெவலில் இருக்கிறது.

சசி குமார், சரத் குமாரை தவிர இயக்குநர் பாரதி ராஜாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version