தமிழ்நாடு
ஃபோனால் மாட்டிய கதை.. விஜய் ரசிகர்களை போலீஸ் பிடித்தது எப்படி?
![vijay top - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/vijay-top.bmp)
சென்னை: அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்களை போலீஸ் எப்படி பிடித்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி வெற்றி அடைந்தது. இந்த படத்தில் அதிமுகவிற்கு எதிராக சில வசனங்களும் காட்சிகளும் இருந்தது. இதனால் விஜய் ரசிகர்களுக்கும், அதிமுகவினரும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
அதன்பின் சர்கார் படத்தில் இருக்கும் சில மோசமான காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்டது.
இதையடுத்து, விஜய் ரசிகர்கள் இருவர், அதிமுகவினருக்கும், ஆளுகட்சிக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் நாங்கள் நினைத்தால் கொலை கூட செய்வோம் என்பது போல மிரட்டல் விடுத்து இருந்தனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் போலீஸ் அவர்களை இப்போதுதான் கைது செய்துள்ளது. அவர்கள் சிக்கிய கதையே மிகவும் சுவாரசியமானது.